உள்ளூர் செய்திகள்

இலளிகம், நார்த்தம்பட்டியில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு

Published On 2023-08-31 10:01 GMT   |   Update On 2023-08-31 10:01 GMT
  • ரூ.23.57 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு உள்ள புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தின் திறப்பு விழா மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடை பெற்றது.
  • அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டியும், குத்து விளக்கு ஏற்றியும் தொடங்கி வைத்தார்.

தருமபுரி, 

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், தலவாய்அள்ளி ஊராட்சி யில் ரூ.23.56 லட்சம் மதிப்பீட்டிலும், இலளிகம் ஊராட்சியில் ரூ.23.30 லட்சம் மதிப்பீட்டிலும், நார்த்தம்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.23.57 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு உள்ள புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தின் திறப்பு விழா மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடை பெற்றது.

விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டியும், குத்து விளக்கு ஏற்றியும் தொடங்கி வைத்தார். பின்னர் பொது மக்களுக்கு இனிப்புகளையும் வழங்கினார்.

இந்நிகழ்வில் வட்டாட் சியர் ஆறுமுகம், மாவட்ட செயலாளர்கள் தடங்கம் சுப்பிரமணி, முனைவர் பழனியப்பன், நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ.எஸ்.சண்முகம், ஊராட்சி மன்ற தலைவர்கள் பரி மளா மாதேஷ் குமார், நார்த்தம்பட்டி கலை செல்வன், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News