உள்ளூர் செய்திகள்

இ-சேவை மையத்தை மேயர் சண்.ராமநாதன் திறந்து வைத்து பார்வையிட்டார்.

தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் இ-சேவை மையம் திறப்பு

Published On 2023-03-01 15:23 IST   |   Update On 2023-03-01 15:23:00 IST
  • ஜாதி சான்றிதழ், வருமானம் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு வகையான சான்றிதழ்கள் பெற்று தரப்படும்.
  • கணினி செயலில் உள்ளீடு செய்தால் மாநகராட்சியால் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும்.

தஞ்சாவூர்:

தமிழ்நாடு முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனை முன்னிட்டு தஞ்சாவூர் மாநக ராட்சி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று இ -சேவை மையம் தொடங்கப்பட்டது.

இதனை ஆணையர் சரவணக்குமார் முன்னிலையில் மேயர் சண். ராமநாதன் திறந்து வைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது :-

இ சேவை மையத்தில் ஆதாரில் பெயர் மாற்றம், பிறந்த தேதி மாற்றம், முகவரி மாற்றம், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், குடும்ப தலைவர் மாற்றம், புதிய ரேஷன் கார்டு, அட்டை நகல், சிறுபான்மையினருக்கான உதவித்தொகை, முன்னாள் ராணுவத்திற்கான உதவித்தொகை, தேசிய கல்வி உதவித்தொகை பெறுதல், வேலைவாய்ப்பு பதிவு மற்றும் வேலை வாய்ப்பு பதிவை புதுப்பித்தல், ஜாதி சான்றிதழ், வருமானம் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு வகையான சான்றிதழ்கள் பெற்று தரப்படும்.

பொது மக்களுக்கு அரசு நிர்ணயிக்கும் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும்.

தங்களது வார்டுகளில் ஏற்படும் அனைத்து விதமான கோரிக்கைகள் மீது தொடர்ந்து உடனுக்குடன் நடவடிக்கை எடுத்திடவும் சரி செய்திடவும் ஸ்மார்ட் தஞ்சை என்ற கணினி செயலில் உள்ளீடு செய்தால் மாநகராட்சியால் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாநகர் நல அலுவலர் சுபாஷ் காந்தி, கண்காணிப்பாளர் ஜெயக் குமார், செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி செயற்பொறியாளர் ராஜசேகரன் மற்றும் கவுன்சிலர்கள், மாநகராட்சி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News