உள்ளூர் செய்திகள்

பலியான மணிகண்டன்.

சாலை விபத்தில் ஒருவர் பலி

Published On 2023-02-01 09:17 GMT   |   Update On 2023-02-01 09:17 GMT
  • மோட்டார் சைக்கிள் மீது எதிரே வந்த ஆட்டோ மோதியதாக கூறப்படுகிறது.
  • சிகிச்சை பெற்று வந்தவர் பலனின்றி உயிரிழந்தார்.

பாபநாசம்:

திருச்சி மாவட்டம், குறிச்சி தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் இவரது மகன் மணிகண்டன் (43).

இவர் கடந்த 23 ம் தேதி இரவு தஞ்சாவூர் - கும்பகோணம் நெடுஞ்சா லையில் பாபநாசம் தெற்கு வீதி, கடைவீதியில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றார்.

அப்போது மோட்டார் சைக்கிள் மீது எதிரே வந்த ஆட்டோ மோதியதாக கூறப்படுகிறது. இதில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்த மணிகண்டனை அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த மணிகண்டன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து மணிகண்டனின் தாயார் நாகரத்தினம் (65) கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி உள்ளிட்ட போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News