உள்ளூர் செய்திகள்
- விபத்து குறித்து பல்லடம் போல் போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
- பலத்த காயம் அடைந்த அவரை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள காளி வேலம்பட்டி பிரிவில், வடக்கிலிருந்து தெற்கு நோக்கி சாலையை கடப்பதற்காக நடந்து சென்று கொண்டிருந்த சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் மீது, பல்லடத்தில் இருந்து கோவை நோக்கி சென்ற கார் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இந்த விபத்து குறித்து பல்லடம் போல் போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.