உள்ளூர் செய்திகள்

பலியான நாகராஜ்.

திண்டுக்கல் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் பலி

Published On 2022-09-26 10:57 IST   |   Update On 2022-09-26 10:57:00 IST
  • அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
  • வாகன ஓட்டுனரை போலீசார் தேடி வருகின்றனர்.

வடமதுரை:

திண்டுக்கல் அருகே குஜிலியம்பாறை தாலுகா ஆர்.வெள்ளோடு இடையபட்டியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது44). இவருக்கு ரேணுகா என்ற மனைவியும் ஒரு மகன்,3 மகள்களும் உள்ளனர்.

இந்த நிலையில் நாகராஜ் சாலையில் படுகாயங்களுடன் கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா உத்தரவின் பேரில் குஜிலியம்பாறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

அங்கு சென்று பார்த்தபோது நாகராஜ் இறந்து கிடந்தார். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணை நடத்தியதில் அடையாளம் தெரியாத வாகனம் நாகராஜ் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டதும் இதில் அவர் சம்பவ இடத்திலேேய பலியானதும் தெரிய வந்தது.

மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து வாகன ஓட்டுனரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News