உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி, தருமபுரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்

Published On 2023-08-30 10:07 GMT   |   Update On 2023-08-30 10:07 GMT
  • வீட்டின் முன்பு அத்தப்பூ கோலமிட்டு பண்டிகையை கொண்டாடினார்.
  • கலெக்டருக்கு அரசு அலுவலர்கள், ஓணம் வாழ்த்துக்களை கூறினார் கள்.

கிருஷ்ணகிரி,  

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த பலரும் பணி நிமித்தமாக வசித்து வருகிறார்கள். அவர்கள் ஓணம் பண்டி கையை சிறப்பாக கொண்டாடி னார்கள். இதையொட்டி புத்தாடை அணிந்து வீடுகள் முன்பு அத்தப்பூ கோலமிட்டு பண்டிகையை கொண்டா டினார்கள். மேலும் வீடுகளை மலர்களால் அலங்கரித்திருந்தனர்.

கலெக்டர் முகாம் அலுவ லகம் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு கேரளா மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் ஆவார். அவர் நேற்று தனது அலுவலகத்தில் ஓணம் பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாடினார்.  வீட்டின் முன்பு அத்தப்பூ கோலமிட்டு பண்டிகையை கொண்டாடினார். இதையொட்டி கலெக்டருக்கு அரசு அலுவலர்கள், ஓணம் வாழ்த்துக்களை கூறினார்கள்.

இதே போல ஓசூர், கிருஷ்ணகிரி உள்பட மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வசிக்க கூடிய கேரளா மாநில மக்கள் ஓணம் பண்டிகையை நேற்று சிறப்பாக கொண்டா டினார்கள். இதே போல் தருமபுரி மாவட்டத்திலும் கேரளா மாநில மக்கள் ஓணம் பண்டிகையை கொண்டாடினார்கள்.

Tags:    

Similar News