உள்ளூர் செய்திகள்

காதல் பிரச்சினையில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2022-11-06 14:10 IST   |   Update On 2022-11-06 14:10:00 IST
  • வீட்டில் காதல் பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது.
  • மனமுடைந்து காணப்பட்ட விக்னேஸ் நேற்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி, 

ஆந்திர மாநிலம், குப்பம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஸ். இவரது மகன் விக்னேஸ் (வயது18). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூரில் தங்கி வேலை பார்த்து வந்தார்.

இவர் குப்பம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இதனால் வீட்டில் பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட விக்னேஸ் நேற்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து பாகலூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News