உள்ளூர் செய்திகள்

மத்தூர் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவிலில் இந்து முன்ணனியினர் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

இந்து முன்னணி சார்பில் மத்தூர் கோவிலில் தூய்மை பணி

Published On 2022-06-27 08:17 GMT   |   Update On 2022-06-27 08:17 GMT
  • இந்து முன்னணி சார்பில் தூய்மை பணி நடந்தது.
  • மத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் மீனா சக்தி முன்னிலையில் தூய்மை பணி நடந்தது.

மத்தூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் திருப்பத்தூர் சாலையில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் இந்து முன்னணி சார்பில் உழவாரப்பணி மத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் மீனா சக்தி முன்னிலையில் நடைபெற்றது.

இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் வல்லரசு தலைமையில் கோயில் வளாகம் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் இந்து முன்னணி சார்பில் செடி கொடிகள், முட்புதர்கள் அகற்றும் பணியை மத்தூர் ஒன்றிய பொறுப்பாளர்கள், அன்னையர் முன்னணி பொறுப்பாளர்கள், ஊர் பொதுமக்கள் என 30 நபர்கள் கலந்து கொண்டு செய்து முடித்தனர்.

Similar News