உள்ளூர் செய்திகள்

கைது செய்யப்பட்ட ஜெயராமன்.

இருசக்கர வாகனத்தில்மது பாட்டில்கள் கடத்தியவர் கைது

Published On 2023-01-11 15:15 IST   |   Update On 2023-01-11 15:15:00 IST
  • மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாக தகவல்.
  • மதுபாட்டில்களை வாங்கி, இரு சக்கர வாகனத்தில் வைத்துக் கொண்டு, கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக வாழப்பாடி போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது.

வாழப்பாடி:

வாழப்பாடி அடுத்த பழனியாபுரம் பகுதியில் டாஸ்மாக் மதுபாட்டில்களை வாங்கி, இரு சக்கர வாகனத்தில் வைத்துக் கொண்டு, கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக வாழப்பாடி போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. இதனையடுத்து, வாழப்பாடி காவல் ஆய்வாளர் உமாசங்கர் தலைமையிலான போலீசார், பழனியாபுரம் பகுதியில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது, அவ்வழியாக சென்ற ஜெயராமன் (40) என்பவரது இரு சக்கர வாகனத்தை சோதனை செய்ததில், 2 கைப்பைகளில் 200 குவாட்டர் மது பாட்டில்களை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, இவரை கைது செய்த வாழப்பாடி போலீசார், இவரிடம் இருந்த 200 மது பாட்டில்கள் மற்றும் இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News