உள்ளூர் செய்திகள்

திருவள்ளூர் அருகே மூதாட்டி மர்ம மரணம்: போலீசார் விசாரணை

Published On 2023-08-28 06:56 GMT   |   Update On 2023-08-28 06:56 GMT
  • தினமும் இரவு லட்சுமி அருகில் உள்ள மற்றொரு வீட்டில் தனியாக தூங்குவது வழக்கம்.
  • வீட்டில் உள்ள அறையில் லட்சுமி மர்மமாக இறந்து கிடந்தார்.

திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த பண்ணூர் புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி (வயது85). இவர் தனது மகன்கள் பங்காரு, முருகன் ஆகியோருடன் வசித்து வந்தார். தினமும் இரவு அவர் அருகில் உள்ள மற்றொரு வீட்டில் தனியாக தூங்குவது வழக்கம்.

இந்த நிலையில் வீட்டில் உள்ள அறையில் லட்சுமி மர்மமாக இறந்து கிடந்தார். அவரது மகனின் நண்பர் ஒருவர் கடந்த சில நாட்களாக லட்சுமியின் வீட்டில் இரவு தங்கி இருந்ததாக தெரிகிறது. அவரிடம் விசாரணை நடத்த மப்பேடு போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

Tags:    

Similar News