உள்ளூர் செய்திகள்

மோட்டார்சைக்கிள் மோதி மூதாட்டி பலி

Published On 2023-01-24 09:03 GMT   |   Update On 2023-01-24 09:03 GMT
  • மாணிக்கநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல். கூலி தொழிலாளி. இவரது மனைவி செல்லம்மாள் (வயது 63).
  • கபிலர்மலையிலிருந்து பரமத்தி நோக்கி அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள், செல்லம்மாள் மீது மோதியது.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி அருகே உள்ள மாணிக்கநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல். கூலி தொழிலாளி. இவரது மனைவி செல்லம்மாள் (வயது 63).

இவர் நேற்று அப்பகு தியில் உள்ள தென்னை மட்டைகளை சேகரித்து தலையில் வைத்துக் கொண்டு, பரமத்தியில் இருந்து கபிலர்மலை செல்லும் வழியில், மாணிக்க நத்தம் பிரிவு சாலையை கடக்க முயன்றுள்ளார்.

அப்போது கபிலர்மலையிலிருந்து பரமத்தி நோக்கி அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள், செல்லம்மாள் மீது மோதியது. இதில் செல்லம்மாள் பலத்த காயமடைந்தார்.

அவரை அவ்வழியாக வந்தவர்கள் காப்பாற்றி, வேலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் செல்லம்மாள் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பரமத்தி போலீ சில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, செல்லம்மாள் மீது மோதி விபத்து ஏற்படுத்தி விட்டு

தப்பியோடிய மோட்டார் சைக்கிள் ஓட்டுனரை தீவிர மாக தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News