உள்ளூர் செய்திகள்

சுரண்டை அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை

Published On 2022-12-12 09:15 GMT   |   Update On 2022-12-12 09:15 GMT
  • சுரண்டை வடக்குத்தி அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் சொரிமுத்து கடந்த சில மாதங்களாக இவருக்கு காலில் புண் ஏற்பட்டுள்ளது.
  • நேற்று அவரது குடும்பத்தினர் அனைவரும் அம்பையில் நடைபெற்ற ஒரு சுபநிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றுவிட்டனர்.

நெல்லை:

சுரண்டை வடக்குத்தி அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் சொரிமுத்து(வயது 70). கடந்த சில மாதங்களாக இவருக்கு காலில் புண் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று அவரது குடும்பத்தினர் அனைவரும் அம்பையில் நடைபெற்ற ஒரு சுபநிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றுவிட்டனர். வீட்டில் தனியாக இருந்த சொரிமுத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக சுரண்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News