உள்ளூர் செய்திகள்
- பின்னால் வேகமாக வந்த டேங்கர் லாரி -முதியவர் மீது மோதியதில் படுகாயமடைந்தார்
- அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள தேவர்குட்டபள்ளி பகுதியை சேர்ந்த முதியவர் சென்னப்பா (வயது 84),
இவர் ஒசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை சின்னாறு பேடப்பள்ளி பிரிவுசாலையில் சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் வேகமாக வந்த டேங்கர் லாரி -முதியவர் மீது மோதியதில் படுகாயமடைந்தார். உடனடியாக அவரை மீடடு கிருஷ்ணகிரி அரசு மருத்துகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைகாக தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து சூளகிரி போலீசார் லாரி டிரைவர் மீது வழக்கு பதிவு விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.