உள்ளூர் செய்திகள்
சேலம் ரெயில்வே பாலம் அடியில் முதியவர் பிணம்
- செவ்வாய்ப் பேட்டை லாரி மார்க்கெட் அருகில் புதிய ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.
- மேம்பாலத்தின் கீழே தேங்கிய மழை நீரில் 60 வயது முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார்.
சேலம்:
சேலம் செவ்வாய்ப் பேட்டை லாரி மார்க்கெட் அருகில் புதிய ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தின் கீழே தேங்கிய மழை நீரில் 60 வயது முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்த பள்ளப்பட்டி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று முதியவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்த முதியவர் எப்படி இறந்தார்? அவரது பெயர்? உள்ளிட்டவை எதுவும் தெரியவில்லை.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.