உள்ளூர் செய்திகள்

செஞ்சி அருகே பாம்பு கடித்து முதியவர் சாவு

Published On 2023-09-28 07:42 GMT   |   Update On 2023-09-28 07:42 GMT
  • அப்பாவு தனது வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தபோது விஷப்பாம்பு கடித்தது.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விழுப்புரம்:

செஞ்சி அருகே உள்ள செம்மேடு அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் அப்பாவு (வயது 73). இவர் தனது வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தபோது விஷப்பாம்பு கடித்தது. இதில் அப்பாவு சம்பவ இடத்திலேயே இறந்தார்். இது குறித்து அவரது மகன் அஜித் குமார் கொடுத்த புகாரின் பேரில் நல்லாண் பிள்ளை பெற்றால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News