உள்ளூர் செய்திகள்
தேவாரம் அருகே விபத்தில் முதியவர் பலி
- நடைபயிற்சி செய்து கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் படுகாயமடைந்தார்.
- அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தேனி, அக்.19-
தேனி மாவட்டம் நாகலா புரம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டி(65). இவரது மனைவி இறந்துவிட்டார். குழந்தைகள் இல்லாததால் உறவினர் வீட்டில் வசித்து வந்தார்.
சம்பவத்தன்று நடைபயிற்சி செய்து கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி காயமடைந்தார். போடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தேவாரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.