உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

சின்னமனூரில் விஷம் குடித்து முதியவர் தற்கொலை

Published On 2023-04-11 07:02 GMT   |   Update On 2023-04-11 07:02 GMT
  • கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
  • மேல்சிகிச்சைக்காக தேனி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்

தேனி:

தேனி மாவட்டம் குச்சனூர் வ.உ.சி தெருவை சேர்ந்தவர் அழகர்சாமி(71). இவருக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்தார்.

இருந்தபோதும் நோய்குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த அழகர்சாமி விஷம் குடித்து சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மேல்சிகிச்சைக்காக தேனி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.இதுகுறித்து சின்னமனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News