உள்ளூர் செய்திகள்
சங்கராபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி
- மோட்டார் சைக்கிள் அம்மாகண்ணு மீது மோதியது.
- கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் அருகே உள்ள அரியலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூமாலை. இவரது மனைவி அம்மாகண்ணு(80). இவர் அதே கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு நடந்து வந்து சாலையை கடக்க முயன்ற போது பகண்டை கூட்டுச் சாலையில் இருந்து சங்கராபுரம் நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் அம்மாகண்ணு மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அம்மாகண்ணு இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து பகண்டை கூட்டு ரோடுசப்-இன்ஸ்பெக்டர் சூர்யா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.