உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

போடியில் நர்சிங் மாணவி மாயம்

Published On 2023-09-24 06:30 GMT   |   Update On 2023-09-24 06:30 GMT
  • வெளியே சென்ற நர்சிங் மாணவி வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
  • புகாரின்பேரில் போலீசார் மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

மேலசொக்கநாதபுரம்:

போடி ஜே.கே.பட்டியை சேர்ந்தவர் ஜெயராஜ் மகள் உமா(17). இவர் பி.தருமத்துப்பட்டியில் உள்ள டிரஸ்டு மூலம் நர்சிங் முதலாமாண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று டிரஸ்டுக்கு செல்வதாக கூறிச்சென்றார்.

ஆனால் அவர் அங்கு செல்லவில்லை என நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்திலும் தேடிபார்த்தும் கிடைக்காததால் போடி நகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News