உள்ளூர் செய்திகள்

சரவணம்பட்டி அருகே நர்சிங் மாணவி தற்கொலை முயற்சி

Published On 2022-11-03 09:44 GMT   |   Update On 2022-11-03 09:44 GMT
  • போடிநாயக்கனூரைச் சேர்ந்த 17 வயது மாணவி முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
  • விடுதியின் 2-வது தளத்துக்கு சென்ற மாணவி திடீரென கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

சரவணம்பட்டி,

கோவை சரவணம்பட்டி விசுவாசபுரம் பகுதியில் தனியார் நர்சிங் கல்லூரி ஒன்று செயல்படுகிறது. இந்த கல்லூரியில் தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்த 17 வயது மாணவி முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இவர் கல்லூரி விடுதியில் தங்கியிருந்து வகுப்புக்கு சென்று வந்தார். நேற்று மாலை 5.45 மணி அளவில் விடுதியின் 2-வது தளத்துக்கு அந்த மாணவி சென்றார். அங்கிருந்து திடீரென அவர் கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். கீழே விழுந்ததில் மாணவி படுகாயம் அடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மாணவி, அவரது சொந்த ஊரைச் சேர்ந்த ஒருவரை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்ததாக கூறப்படுகிறது. காதல் விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில் மாணவி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக சரவணம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 

Tags:    

Similar News