உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

திண்டுக்கல்லில் ரெயிலில் அடிபட்டு வடமாநில வாலிபர் பலி

Published On 2023-08-22 07:02 GMT   |   Update On 2023-08-22 07:06 GMT
  • வேடபட்டி ஒத்தக்கண் பாலம் அருகே இன்று காலை ரெயிலில் அடிபட்டு ஒரு வாலிபர் இறந்து கிடப்பதாக போலீ சாருக்கு தகவல் கிடைத்தது.
  • ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் வேடபட்டி ஒத்தக்கண் பாலம் அருகே இன்று காலை ரெயிலில் அடிபட்டு ஒரு வாலிபர் இறந்து கிடப்பதாக போலீ சாருக்கு தகவல் கிடைத்தது. இதனைதொடர்ந்து ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணையில் இறந்த வாலிபர் மேற்குவங்க மாநிலம் கோத்ராவை சேர்ந்த அலாவுதீன் சகாஜி(24) என தெரியவந்தது. இவர் திண்டுக்கல்லில் தங்கி வேலை பார்த்தவரா அல்லது வெளியூர் செல்லும்போது தவறிவிழுந்தாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

Similar News