உள்ளூர் செய்திகள்

வடமாநில லாரி டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2023-06-30 15:09 IST   |   Update On 2023-06-30 15:09:00 IST
  • குருப்ரீட்சிங்க்கும், அவரது மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடால் பிரிந்துள்ளனர்.
  • குருப்ரீட்சிங் நேற்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி,

பஞ்சாப் மாநிலம், சூலோவால் பகுதியை சேர்ந்தவர் குருப்ரீட்சிங் (வயது35). இவர் டிரைவராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் இவர் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து லாரியில் தலைகவசம் லோடு ஏற்றி ஓசூருக்கு வந்தார். அங்கு அந்த நிறுவனத்தில் லாரியை நிறுத்தி விட்டு வெளியே வந்தார்.

இதனிடையே குருப்ரீட்சிங்க்கும், அவரது மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடால் பிரிந்துள்ளனர். இதனால் அவரது மனைவி விவாகரத்து தொடர்பாக வழக்கு தொடர்ந்தார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட குருப்ரீட்சிங் நேற்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News