உள்ளூர் செய்திகள்

நீலகிரி மாவட்ட தி.மு.க சார்பில் இளைஞரணி பொறுப்புக்கு நேர்காணல்

Published On 2023-10-14 09:07 GMT   |   Update On 2023-10-14 09:07 GMT
  • சுற்றுலாத்துறை அமைச்சர் பங்கேற்பு
  • நகர-ஒன்றிய-பேரூர் கழக அமைப்பாளர்கள், துணை அமைப்பாளருக்கு எண்ணற்றோர் விண்ணப்பம்

ஊட்டி,

நீலகிரி மாவட்ட தி.மு.க இளைஞர் அணி நகர-ஒன்றிய-பேரூர் கழக அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் பொறுப்புக்கு விண்ணப்பித்தோருக்கான நேர்காணல், ஊட்டி கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் இமயம் சசிகுமார் வரவேற்றார்.

சுற்றுலா அமைச்சர் கா.ராமச்சந்திரன், மாநில இளைஞர் அணி துணை செயலாளர்கள் பிரகாஷ், இளையராஜா, அப்துல்மாலிக், பிரபு, சீனிவாசன், ஆனந்தகுமார், மாவட்ட துணை அமைப்பாளர்கள் நௌபுல், நாகராஜ், பத்மநாபன், முரளிதரன், வினோத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து கட்சி பொறுப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களிடம், நகர-ஒன்றிய-பேரூர் கழகம் வாரியாக மாநில இளைஞர் அணி நிர்வாகிகள் நேர்காணல் நடத்தினர்.

நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர்அலி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முஸ்தபா, இளங்கோவன், மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளர் வாசிம்ராஜா, ஊட்டி நகர செயலாளர் ஜார்ஜ், குன்னூர் நகர செயலாளர் ராமசாமி, குன்னூர் ஒன்றிய செயலாளர் பிரேம்குமார், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் சதக்கத்துல்லா, செல்வம், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் ராஜா, எல்கில் ரவி, காந்தல் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பாபு நன்றி கூறினார்.

Tags:    

Similar News