உள்ளூர் செய்திகள்

குடிசை வீட்டில் தீ விபத்து

Published On 2023-11-13 07:03 GMT   |   Update On 2023-11-13 07:03 GMT
  • தீபாவளியன்று தீ பற்றி எரிந்த கூரை வீடு
  • மங்களமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

அகரம்சீகூர்,

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம்சீகூர் ராசி நகரில் வசித்து வருபவர் கலியபெருமாள் மகன் கோவிந்தராஜ் (58), பந்தல் அமைப்பு காண்ட்ராக்டர் . அருகில் இருக்கும் தமக்கு சொந்தமான வீட்டில் தனது தாயாருடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் இவரது கூரை வீடு மின் கசிவால் நேற்று தீ பற்றி எரிந்தது. அருகில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்து தீயை அணைத்தனர் .

மேலும் கூரை வீட்டில் பந்தல் போடும் பணிக்கான துணிகள், சோபா ஆகிய பொருட்கள் முற்றிலும் சேதம் அடைந்தது. அதன் மதிப்பு சுமார் ரூ.2 லட்சம் ஆகும். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை இச்சம்பவம் குறித்து மங்களமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News