உள்ளூர் செய்திகள்

 உதவி மின் பொறியாளர் விஜயராஜ் மற்றும் பணியாளர்களுக்கு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாபன் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

ரூ.12 லட்சத்தில் புதிய மின்மாற்றிகள் அமைப்பு

Published On 2022-07-15 09:25 GMT   |   Update On 2022-07-15 09:25 GMT
  • ஆழ்வார்குறிச்சி பிரிவுக்கு உட்பட்ட சம்பன் குளம் பகுதியில் மின்னழுத்த குறைபாட்டை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துவந்தனர்.
  • ரூ.12 லட்சத்தில் 3 புதிய 25 கிலோவாட் மின்மாற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

நெல்லை:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை மின் பகிர்மான வட்டம் கல்லிடைக்குறிச்சி கோட்டத்தில் ஆழ்வார்குறிச்சி பிரிவுக்கு உட்பட்ட சம்பன் குளம் பகுதியில் மின்னழுத்த குறைபாட்டை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துவந்தனர்.

இதையடுத்து மேற்பார்வை மின் பொறியாளர் ராஜன் ராஜ் உத்தரவின்பேரில் கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் மேற்பார்வையில் ரூ.12 லட்சத்தில் 3 புதிய 25 கிலோவாட் மின்மாற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

விரைந்து செயல்பட்ட விக்கிரமசிங்கபுரம் உதவி செயற்பொறியாளர் ராஜகிளி, ஆழ்வார்குறிச்சி உதவி மின் பொறியாளர் விஜயராஜ் மற்றும் பணியாளர்களின் கடமைகளை பாராட்டி தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாபன் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், தர்மபுரம் மடம் ஊராட்சி தலைவர் ஜன்னத் சதாம் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News