உள்ளூர் செய்திகள்

நீட் தேர்வு: கோவையில் அரசு பள்ளி மாணவர்கள் 73 பேர் தேர்ச்சி

Published On 2022-09-11 09:11 GMT   |   Update On 2022-09-11 09:11 GMT
  • அரசு பள்ளிகளில் பயின்ற 84 பேர் நீட் தேர்வு எழுதினர்.
  • 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டின் கீழ் இடம் கிடைத்தது.

கோவை

கோவையில் இளநிலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு எழுதிய அரசு பள்ளி மாணவர்களில் 73 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதுதொடர்பாக பள்ளி கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:-

கோவையில் கடந்த கல்வி ஆண்டு அரசு பள்ளிகளில் பயின்ற 84 பேர் நீட் தேர்வு எழுதினர். இதில் 73 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த கல்வி ஆண்டில் கலந்தாய்வில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற கோவையைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களில் 6 பேருக்கு எம்.பி.பி.எஸ். படிக்கவும், 3 பேருக்கு பி.டி.எஸ். ( பல் மருத்துவம்) படிக்கவும் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டின் கீழ் இடம் கிடைத்தது.

நடப்பாண்டு கலந்தாய்வு முடியும்போது தான், அரசு பள்ளி மாணவர்களில் எத்தனை பேருக்கு இடம் கிடைக்கும் என்று தெரிய வரும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

Similar News