உள்ளூர் செய்திகள்
வேப்பூா் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விபத்து; 2 பேர் காயம்
புதுச்சேரி நோக்கி சென்ற காரின் முன் பகுதி டயர் வெடித்து, ஹாசீம் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
கடலூர்:
கள்ளக்குறிச்சி அருகே முஹமதியர்பேட்டை பல்பல்தக்கா பகுதியை சேர்ந்தவர் ஹாசீம் (வயது 75). இவர் தனது மோட்டார் சைக்கிளில் வேப்பூர் அருகிலுள்ள பூலாம்பாடி கிராமத்திலுள்ள தனது உறவினரை பார்க்க சென்றார்.அங்கிருந்து ஊர் திரும்பிய ஹாசீம் வேப்பூர் அருகே சேப்பாக்கம் மேம்பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, ஒட்டன்சத்திரத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற காரின் முன் பகுதி டயர் வெடித்து, ஹாசீம் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஹாசீம் பலத்த காயமடைந்தார். காரின் முன்பகுதி சேதமடைந்தது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த மகேந்திரனின் மனைவி ரேவதி (30), என்பவருக்கு கையில் காயம் ஏற்பட்டது.விபத்து குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.