வேப்பனப்பள்ளி அருகே இருசக்கர வாகனம் மோதி முதியவர் பலி
- இருசக்கர வாகனம் முன்னால் சென்று கொண்டிருந்த ராமன் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
- சம்பவ இடத்திலேயே ராமன் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
வேப்பனப்பள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள எட்ரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராமன் (வயது65). விவசாயியான இவர் நேற்று கொத்தகிருஷ்ணப்பள்ளி யில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார்.
அப்போது வேப்பனப்பள்ளி அருகே உள்ள பண்ணப்பள்ளி கிராமத்தை சேர்ந்த சேஷன் (26)என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் முன்னால் சென்று கொண்டிருந்த ராமன் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே ராமன் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது பற்றி வேப்பனப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
விபத்தில் பலியான ராமன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயம் அடைந்த ேசஷனை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.