வேப்பனப்பள்ளி அருகே நிலத்தகராறில் இருதரப்பினர் மோதல்; பெண்கள் உள்பட 6 பேர் மீது வழக்கு
- 4 பேரும் சேர்ந்து லட்சுமியை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
- 2 பெண்கள் உட்பட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து செய்தனர்.
வேப்பனப்பள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள கொத்த கிருஷ்ணப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பைரேசன். இவரது மனைவி லட்சுமி (வயது30). இவர்களுக்கும்
அதே கிராமத்தை சேர்ந்த பைரேசன் தம்பி மஞ்சுநாத் (45) என்பவருக்கும் இடையே கடந்த சில நாட்களாக நிலத்தகராறு பிரச்சினை இருந்துள்ளது. இதனால் அடிக்கடி அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மஞ்சு நாதனும், லட்சுமியும் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அப்போது மஞ்சுநாதன் மற்றும் அவருடன் இருந்த ஜோதி, அய்யப்பன், மற்றும் பாக்கியலாதா ஆகிய 4 பேரும் சேர்ந்து லட்சுமியை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் காயமடைந்த லட்சுமி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து மோதி கொண்ட இருதரப்பினர்களும் வேப்பனப்பள்ளி போலீசில் புகார் கொடுத்துள்ளனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபால கிருஷ்ணன் இருபிரிவினர்களை சேர்ந்த 2 பெண்கள் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து செய்தார்.
மேலும் தகராறில் ஈடுபட்ட 4 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.