உள்ளூர் செய்திகள்

வடலூர் அருகே 500 ஏக்கர் விளைநிலத்தில் வெள்ளநீர் புகுந்தது

Published On 2022-11-14 07:17 GMT   |   Update On 2022-11-14 07:17 GMT
  • நெல் பயிரிடப்பட்ட நிலங்களில் மழைநீர் புகுந்தது.
  • நீர் புகுந்ததால் சுமார் 500 ஏக்கர் நெற்பயிர்கள் முழுவதும் நீரில் மூழ்கியது.

கடலூர்:

வடலூர் அருகே உள்ள மருவாய், வாலாஜ ஏரியும் அதன் உள்பகுதியில் உள்ள நைனார்குப்பம், மேலக் கொளக்குடி, கருங்குழி உள்ளிட்ட பகுதி யில் உள்ள நெல் பயிரிட ப்பட்ட நிலங்களில் மழைநீர்பு குந்தது. இதனால் நெற்பயி ரிகள் அழுகும்நிலையில் உள்ளது.

மேலும் பரவனாற்று ங்கரை ஓரம் உள்ள ஓணான்குப்பம், அந்தாரசி பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக மழை நீரும் மழைநீருடன் என்.எல்.சி. 2-வது சுரங்கத்தில் இருந்து வெளிேயற்றப்படும் நீரால் பரவனாற்றில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் விவசாயிகளின் நெல் பயிரி டப்பட்ட விளைநில கங்க ளில் நீர் புகுந்ததால் சுமார் 500 ஏக்கர் நெற்பயிர்கள் முழுவதும் நீரில் மூழ்கியது. இதனால் நெல் பயிர்கள் அழகும் நிலையில் உள்ளன.

Tags:    

Similar News