கோப்புப்படம்.
தேனி : அரசு பஸ் டிரைவருக்கு கத்திக் குத்து
- பெரியவர்கள் நடமாடும் பகுதியில் காரை வேகமாக ஏன் ஓட்டுகிறீர்கள்? என கேட்டவருக்கு கொலைமிரட்டல் விடுத்த வாலிபர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
- இது குறித்து வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி:
தேனி அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று சுரேஷ் வீரபாண்டி கோவில் கடையில் பூ வாங்கிக் கொண்டு நின்று கொண்டு இருந்தார்.
அப்போது ஆண்டிபட்டி சுந்தர்ராஜபுரத்தைச் சேர்ந்த முரளி (வயது 29), கருப்பணன் (22), பிரேம்குமார் (27) ஆகியோர் காரில் அதிவேகமாக வந்தனர். அப்போது டிரைவர் சுரேஷ் பெரியவர்கள் நடமாடும் பகுதியில் காரை வேகமாக ஏன் ஓட்டுகிறீர்கள்? என கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் 3 பேரும் சுரேசின் மூக்கில் கத்தியால் குத்தினர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை விலக்க முயன்ற போது கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றனர். படுகாயமடைந்த சுரேஷ் க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இது குறித்து வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.