உள்ளூர் செய்திகள்
சூளகிரி அருகே அரசு பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்
- அரசு ஊழியரான சீமோன் அருள்ராஜ் சி.எஸ்.ஐ., திருச்சபையில் பதவியில் இருந்ததாக புகார்.
- சீமோன் அருள்ராஜை வட்டார கல்வி அலுவலர் வெங்கட்குமார் நேற்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
ஓசூர்,
சூளகிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட தேக்கலப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் சீமோன் அருள்ராஜ். அரசு ஊழியரான இவர் சி.எஸ்.ஐ., திருச்சபையில் பதவியில் இருப்பதாக, சாலமோன் என்பவர் சூளகிரி வட்டார கல்வி அலுவலருக்கு புகார் மனு அனுப்பினார்.
அதன் அடிப்படையில் ஆசிரியர் சீமோன் அருள்ராஜை வட்டார கல்வி அலுவலர் வெங்கட்குமார் நேற்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.