உள்ளூர் செய்திகள்
சிங்காரப்பேட்டை அருகே அரளி விதையை அரைத்து குடித்து மூதாட்டி சாவு
- தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.
- அரளி விதையை அரைத்து குடித்துவிட்டார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரம்பேட்டை போலீஸ் சரகம் நடுப்பட்டியை சேர்ந்தவர் வெங்கம்மாள் (65).
இவருக்கு தீராத வயிற்று வலி ருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த அவர் நேற்று மாலைஅரளி விதையை அரைத்து குடித்துவிட்டார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் ஊத்தங்கரை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து சிங்காரம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.