உள்ளூர் செய்திகள்

சங்கராபுரம் அருகே உரக்கடை பூட்டை உடைத்து பணம் கொள்ளை

Published On 2022-07-08 07:10 GMT   |   Update On 2022-07-08 12:28 GMT
  • சங்கராபுரம் அருகே உரக்கடை பூட்டை உடைத்து பணம் கொள்ளை அடிக்கப்பட்டது.
  • மர்ம நபர்கள் இரவில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபடுவதால் அந்த பகுதியில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பெறும் அச்சத்தில் உள்ளனர்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பகண்டை கூட்ரோட்டில் பிரபல உரக்கடை ஒன்று உள்ளது. இந்த உரக்கடையை தொழுவந்தாங்கால் பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் நடத்தி வருகிறார். இவர் வியாபாரி சங்கத்தில் உறுப்பினராக உள்ளார்.

வழக்கம்போல் நேற்று இரவு வியாபாரம் முடிந்து விட்டு உரக்கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். இன்று காலை மீண்டும் கடைக்கு சென்றார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே கடைக்குள் சென்று பார்த்தபோது கடையில் இருந்த கல்லாப்பெட்டி உடைத்து அதில் இருந்த 30,000 ரொக்க பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இது குறித்து பன்னீர்செல்வம் வியாபாரிகள் சங்க நிர்வாகிகளிடம் தெரிவித்தார். மேலும் பகண்டை கூட்ரோடு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் பகண்டை கூட்ரோடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இடத்தை பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து உரக்கடையில் கைவரிசை காட்டிய மறுமணம் அவர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

மேலும் இதே போன்று பகண்டை கூட்ரோடு சாலை மக்கள் அதிகமாக கூடும் இடங்களான சூப்பர் மார்க்கெட் மருந்து கடை மொபைல் கடை, டீக்கடை போன்ற பல்வேறு இடங்களில் மர்ம நபர்கள் இரவில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபடுவதால் அந்த பகுதியில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பெறும் அச்சத்தில் உள்ளனர். இதனால் இந்த கொள்ளை கும்பலை தடுக்கும் விதமாக போலீசார் இரவு நேர ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும் என வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றன.

 

Tags:    

Similar News