உள்ளூர் செய்திகள்

சங்கராபுரம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி

Published On 2022-09-05 07:24 GMT   |   Update On 2022-09-05 07:24 GMT
  • ஜெகன் மோட்டார் சைக்கிளில் ராவுத்தநல்லூரில் இருந்து புதூரை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
  • எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஜெகன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் ராவத்த நல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஜெகன் (34). இவர் மூங்கில் துறைப்பட்டில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று ஜெகன் மோட்டார் சைக்கிளில் ராவுத்தநல்லூரில் இருந்து புதூரை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்பொழுது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஜெகன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்த னர்.

டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஜெகன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.மாவட்டம் சங்கராபுரம் வட்டம் ராவத்த நல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஜெகன் (34). இவர் மூங்கில் துறைப்பட்டில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று ஜெகன் மோட்டார் சைக்கிளில் ராவுத்தநல்லூரில் இருந்து புதூரை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்பொழுது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஜெகன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்த னர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஜெகன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News