உள்ளூர் செய்திகள்

சாமல்பட்டி அருகே சூதாடிய 3 பேர் கைது

Published On 2023-01-23 09:36 GMT   |   Update On 2023-01-23 09:36 GMT
  • பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
  • பெருமாள் கோவில் அருகே சூதாடி கொண்டிருந்த 3 பேர் பிடிபட்டனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி அருகே பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சாமல்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அதளியூர் பெருமாள் கோவில் அருகே சூதாடி கொண்டிருந்த 3 பேர் பிடிபட்டனர்.

அவர்கள் அதே பகுதியை சேர்ந்த வீரசேகர் (வயது 30), ரஞ்சிதுகுமார் (36), பிரபு (28) என்பது தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ரூ.1,950 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News