உள்ளூர் செய்திகள்
சாமல்பட்டி அருகே சூதாடிய 3 பேர் கைது
- பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- பெருமாள் கோவில் அருகே சூதாடி கொண்டிருந்த 3 பேர் பிடிபட்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி அருகே பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சாமல்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அதளியூர் பெருமாள் கோவில் அருகே சூதாடி கொண்டிருந்த 3 பேர் பிடிபட்டனர்.
அவர்கள் அதே பகுதியை சேர்ந்த வீரசேகர் (வயது 30), ரஞ்சிதுகுமார் (36), பிரபு (28) என்பது தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ரூ.1,950 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.