ராயக்கோட்டை அருகே சீட்டு விளையாட தந்தை பணம் கொடுக்காததால் உயிரை மாய்த்த வாலிபர்
- சீட்டு விளையாடும் பழக்கம் இருப்பதால் அடிக்கடி தனது தந்தையிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார்.
- ரஞ்சித்குமார் வீட்டில் யாரும் இல்லாததால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே உள்ள கொப்பக்கரை கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி. விவசாயி. இவரது மகன் ரஞ்சித்குமார் (வயது24). இவர் 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு அவரது தந்தையுடன் விவசாயம் செய்து வந்தார்.
இந்த நிலையில் சீட்டு விளையாடும் பழக்கம் இருப்பதால் அடிக்கடி தனது தந்தையிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார்.
நேற்று மீண்டும் பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர் பணம் இல்லை என்று கூறிவிட்டு ராயக்கோட்டைக்கு சென்றுவிட்டார்.
இதில் மனமுடைந்த ரஞ்சித்குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து ராயக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் விரைந்து வந்தனர். தூக்கில் பிணமாக கிடந்த ரஞ்சித்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக கோவிந்தசாமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.