உள்ளூர் செய்திகள்

போச்சம்பள்ளி அருகே எலி பேஸ்ட் தின்ற மாணவி சாவு

Published On 2022-06-29 15:26 IST   |   Update On 2022-06-29 15:26:00 IST
  • கடந்த 16-ந்தேதி அன்று மாணவி எலி பேஸ்ட் தின்றார்.
  • சிகிச்சை பலனின்றி நேற்று மாணவி நித்யா பரிதாபமாக உயிரிழந்தார்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்துள்ள மகாதேவகொல்லஅள்ளி பகுதியை சேர்ந்தவர் சாம்பசிவம். இவரது மகள் நித்யா (வயது15). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 16-ந்தேதி அன்று மாணவி எலி பேஸ்ட் தின்றார். இதனை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாணவி நித்யா பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து போச்சம்பள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News