உள்ளூர் செய்திகள்

மயிலம் அருகே ரயில் மோதி மூதாட்டி பலி

Published On 2022-08-01 07:04 GMT   |   Update On 2022-08-01 07:04 GMT
  • மயிலம் அருகே ரயில் மோதி மூதாட்டி பலியானார்.
  • காலை இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டின் அருகே உள்ள ரயில் பாதையை கடக்க முயன்றுள்ளார்.

விழுப்புரம்: 

விழுப்புரம் அருகே மயிலம் போலீஸ் சரகம் சின்ன நெற்குணம் கிரா மத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. அவரது மனைவி குப்பம்மாள் (வயது70). இவர் இன்று அதி காலை இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டின் அருகே உள்ள ெரயில் பாதை–யை கடக்க முயன்றுள்ளார். அப்போது சென்னையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற ெரயில் மூதாட்டி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு மூதாட்டி சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு ெரயில்வே இரும்பு பாதை போலீசார் மூதாட்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News