உள்ளூர் செய்திகள்

பாரூர் அருகே நிலத்தகராறில் 8 பேர் மீது வழக்கு

Published On 2022-07-01 14:38 IST   |   Update On 2022-07-01 14:38:00 IST
  • நிலத்தகராறில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பானது.
  • 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் போலீஸ் சரகம் கொட்டாவூர் பகுதியை சேர்ந்தவர் பூபதி. இதே பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவர்களுக்குள் நிலத்தகராறு இருந்து வந்தது.

இதன் எதிரொலியாக ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பானது. இரண்டு தரப்பிலும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் காயமடைந்தவர்கள் போச்சம்பள்ளி மற்றும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இரு தரப்பிலும் போலீசில் புகார் தரப்பட்டுள்ளது.

அதன் பேரில் பாரூர் போலீசார் ராமமூர்த்தி, சரசுவதி, விஜயகுமார், இளவரசன், பூபதி, சாலி, அரிகிருஷ்ணன், மஞ்சம்மாள் உள்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News