உள்ளூர் செய்திகள்

பர்கூர் அருகே கார் மோதி சைக்கிளில் சென்றவர் பலி

Published On 2022-07-07 15:30 IST   |   Update On 2022-07-07 15:30:00 IST
  • கார் எதிர்பாராதவிதமாக சைக்கிள் மீது மோதியது.
  • இது குறித்து பர்கூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் பிச்சாண்டி. இவர் சென்னை-திருவண்ணாமலை சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது பர்கூர் ஜங்சன் பிரிவு திரும்பும் போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக சைக்கிள் மீது ேமாதியது. இதில் தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பிச்சாண்டி உயிரிழந்தார்.

இது குறித்து பர்கூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News