உள்ளூர் செய்திகள்

பேரிகை அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது

Published On 2022-11-02 15:22 IST   |   Update On 2022-11-02 15:22:00 IST
  • அப்பகுதியில் உள்ள தோப்பு ஒன்றில் சிலர் பணம் வைத்து சூதாடுவது தெரிய வந்தது. போலீசார் அங்கு சென்றதும் சூதாடி கொண்டிருந்த கும்பலில் 3 பேர் ஓட்டம் பிடித்து விட்டனர்.
  • உமேஷ் (வயது 28),அபிஷ்குமார் (28), ஸ்ரீராம் (36) ஆகிய 3 பேரை போலீசார் மடக்கி கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகேயுள்ள கன்னப்பள்ளி பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர்.

அப்போது அப்பகுதியில் உள்ள தோப்பு ஒன்றில் சிலர் பணம் வைத்து சூதாடுவது தெரிய வந்தது. போலீசார் அங்கு சென்றதும் சூதாடி கொண்டிருந்த கும்பலில் 3 பேர் ஓட்டம் பிடித்து விட்டனர்.

உமேஷ் (வயது 28),அபிஷ்குமார் (28), ஸ்ரீராம் (36) ஆகிய 3 பேரை போலீசார் மடக்கி கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து ரூ.9 ஆயிரத்து 880 பணம் மற்றும் 6 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News