உள்ளூர் செய்திகள்

பண்ருட்டி அருகேநிலத்தராறில் வீடு புகுந்து கணவன்-மனைவி மீது தாக்குதல்::17 பேர் மீது வழக்கு- 2 பேர் கைது,

Published On 2023-01-21 07:26 GMT   |   Update On 2023-01-21 07:26 GMT
  • இவருக்கும் அதே பகுதி சேர்ந்த வளையாபதி என்பவருக்கும் வீட்டுமனை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது.
  • அம்சகுமார், அவரது மனைவியையும் ஆபாசமாக திட்டி அவரது இரு சக்கர வாகனத்தையும் உடைத்து சேதப்படுத்தினர்.

கடலூர்:

பண்ருட்டி அருகே காடாம்புலியூர் தெற்கு சாத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருக்கும் அதே பகுதி சேர்ந்த வளையாபதி என்பவருக்கும் வீட்டுமனை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது.   அந்தபிரச்சினைக்கு சுப்பிரமணியத்தின் அண்ணன் ஆறுமுகம், அவரது மகன் அம்சகு மாரும் காரணம் என கருதி வளையாபதி மற்றும் அவரது உறவினர்கள் ஒன்று சேர்ந்து அம்சகுமார் வீட்டிற்கு சென்றனர் 

 பின்னர் அம்சகுமார், அவரது மனைவியையும் ஆபாசமாக திட்டி அவரது இரு சக்கர வாகனத்தையும் உடைத்து சேதப்படுத்தினர்.  இது பற்றி தகவல் அறிந்ததும் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டி யன்,சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்  இதுகுறித்து வளையாபதி,தியாகராஜன்,ராமச்சந்திரன்,தங்கமணி ஜெய க்கொடி,அருள்பாண்டியன் உள்ளிட்ட 17 பேர் மீதுவழக்கு பதிவு செய்துஅருள்பாண்டியன் (19),சுப்பிரமணியன் (52) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News