உள்ளூர் செய்திகள்

பாலக்கோடு அருகே மணல் கடத்திய 5 டிராக்டர் உள்பட 6 வாகனங்கள் பறிமுதல்

Published On 2022-10-20 09:16 GMT   |   Update On 2022-10-20 09:16 GMT
  • மணல் கடத்திய வாகனங்களை சிறைபிடித்து பந்தல் அமைத்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
  • வருவாய்துறை , வனத்துறை அதிகாரிகள் நேரில் சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பாலக்கோடு,

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சீங்காடு கிராம பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இந்த மழை பொழிவால் கிராமத்தை ஒட்டி உள்ள காப்புக்காடு வனப் பகுதிகளில் வழிந்தோடும் நீரோடை மற்றும் ஆற்றுப்பகுதிகளில் சட்டவிரோதமாக அரசு அனுமதியின்றி நேற்று 5 டிராக்டர், ஜேசிபி எந்திரம் மூலமாக மணல் கடத்திய நிலையில் 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்றிணைந்து மணல் கடத்திய வாகனங்களை சிறைபிடித்து பந்தல் அமைத்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதையடுத்து தகவல் அறிந்த காவல்துறை, வருவாய்த்து றை துறை, வனத்துறை அதிகாரிகள் நேரில் சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பாலக்கோடு வட்டாட்சியர், காவல்துறை அதிகாரிகள் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து நீண்ட நேர போரட்டத்திற்கு பிறகு பொதுமக்கள் கலைந்து சென்றனர். மேலும் மணல் கடத்தலில் ஈடுபட்ட ஐந்து டிராக்டர்கள் மற்றும் ஒரு ஜேசிபியை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News