உள்ளூர் செய்திகள்

மத்தூர் அருகே கழிவுநீர் கால்வாயை இடித்து சேதப்படுத்திய தொழிலாளி கைது

Published On 2022-06-29 15:24 IST   |   Update On 2022-06-29 15:24:00 IST
  • எனது சொந்த இடத்தில் கழிவுநீர் கால்வாய் எதற்கு அமைத்துள்ளீர்கள் என வாக்குவாதம் செய்தனர்.
  • புகாரின் பேரில் போலீசார் சீனிவாசனை கைது செய்தனர்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள பெருகோபனபள்ளி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது52). இவரது மனைவி அலமேலு (41).

இந்த நிலையில் பெருகோபனபள்ளி கிராமத்தில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கழிவுநீர் கால்வாய் கட்டியுள்ளனர். அப்போது சீனிவாசன் மற்றும் அவரது மனைவி அலமேலு ஆகியோர் தனது வீட்டின் முன்பு எனது சொந்த இடத்தில் கழிவுநீர் கால்வாய் எதற்கு அமைத்துள்ளீர்கள் என வாக்குவாதம் செய்தனர். பின்னர் கால்வாயை இடித்து தள்ளி உள்ளனர்.

இது குறித்து பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கட்ராமன் மத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் சீனிவாசனை கைது செய்தனர். தலைமறைவான அலமேலுவை தேடி வருகின்றனர்.

Similar News