உள்ளூர் செய்திகள்
மத்தூர் அருகே அனுமதியின்றி மண் கடத்திய 2 பேர் கைது
- மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி, ஜே.சி.பி. பறிமுதல் செய்யப்பட்டது.
- இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள நடுப்பட்டி பகுதியில் அனுமதியின்றி மண் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது நடுப்பட்டியில் அனுமதியின்றி மண் கடத்திய அதே பகுதிைய சேர்ந்த கோவிந்தராஜ் (வயது32), தருமபுரி மாவட்டம், கிருஷ்ணாபுரம் அடுத்துள்ள அரியகுளம் உண்ணியம்பட்டிைய சேர்ந்த மணிகண்டன் (26) ஆகியோர் என்பது தெரியவந்தது. உடனே அவர்களை இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் மண் கடத்தலுக்கு பயன்படுத்திய ஜே.சி.பி., டிப்பர் லாரி ஆகிய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.