உள்ளூர் செய்திகள்

மத்திகிரி அருகே வீடு புகுந்து விலை உயர்ந்த செல்போன்களை திருடிய ஆசாமி கைது

Published On 2022-06-26 08:44 GMT   |   Update On 2022-06-26 08:44 GMT
  • மத்திகிரி அருகே வீடு புகுந்து திருடியவன் சிக்கினான்.
  • 5 செல்போன்கள் அவனிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி போலீஸ் சரகம் பொம்மண்ட ஹள்ளி சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன்.

இவரது மகன் கோகுலக்கண்ணன். இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி போலீஸ் சரகம் பொம்மண்ட ஹள்ளி பகுத்தியில் வாடகைக்கு அறை எடுத்தது தங்கி ஓசூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

இவர் அறையில் படுத்து தூங்கி கொண்டிருந்த போது ஒரு மர்ம ஆசாமி நைசாக உள்ளே புகுந்து அறையில் வைக்கப்பட்டிருந்த கொடுக்கண்ணன் மற்றும் அவரது நண்பர்களின் 5 விலை உயர்ந்த செல்போன்களை திருடியுள்ளான்.

சத்தம் கேட்டு எழுந்த கோகுலக்கண்ணன் அந்த ஆசாமியை மடக்கிப்பிடித்து மத்திகிரி போலீசில் ஒப்படைத்தார்.

போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்ட ஆசாமி திருப்பத்தூர் மாவட்டம் அழுந்தூரை சேர்ந்த பிலிப்(20) என்பது தெரியவந்தது.

அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

Similar News