உள்ளூர் செய்திகள்

மாரண்டஅள்ளி அருகே விஷம் குடித்த விவசாயி சாவு

Published On 2022-07-28 09:46 GMT   |   Update On 2022-07-28 09:46 GMT
  • சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்தார்.
  • இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி கோவிந்தன் உயிரிழந்தார்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அடுத்த மல்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது58). விவசாயியான இவர் சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்தார். இதனால் அவர் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி கோவிந்தன்  பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து மாரண்ட அள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News