உள்ளூர் செய்திகள்

மகாராஜா கடை அருகே கடையின் பூட்டை உடைத்து பணம் கொள்ளை

Published On 2022-11-03 15:17 IST   |   Update On 2022-11-03 15:17:00 IST
  • அந்த கடையில் கடந்த 15-ந்தேதி அன்று மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.
  • கல்லா பெட்டியில் இருந்த 300 பணம் மற்றும் ஏ.டி.எம். கார்டு ஆகியவை எடுத்து சென்றனர். ஏ.டி.எம். கார்டில் ரூ.8 ஆயிரத்தையும் எடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜாகடை அடுத்துள்ள பழையூர் பகுதியை சேர்ந்தவர் ரகுபதி (வயது39). இவர் காட்டிநாயக்கனப்பள்ளியில் டிப்பார்ட் மெண்ட் ஸ்டோர் கடை நடத்தி வருகிறார்.

அந்த கடையில் கடந்த 15-ந்தேதி அன்று மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் கல்லா பெட்டியில் இருந்த 300 பணம் மற்றும் ஏ.டி.எம். கார்டு ஆகியவை எடுத்து சென்றனர். ஏ.டி.எம். கார்டில் ரூ.8 ஆயிரத்தையும் எடுத்துள்ளனர்.

இது குறித்து ரகுபதி நேற்று மகாராஜா கடை போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News