உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரி அருகே பெண்ணை தாக்கி நகையை பறித்த திருடர்கள்
- கிருஷ்ணகிரி அருகே பெண்ணிடம் நகை பறி த்துள்ளனர்.
- அப்போது திருடர்கள் அவரை தாக்கினர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் போலீஸ் சரகம் சிவசக்தி நகரை சேர்ந்தவர் ராஜு. இவரது மனைவி யசோதா(43). இவர் கடைக்கு பொருட்கள் வாங்க சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு நடந்து வந்துக்கர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 23 வயதுடைய 2 மர்ம ஆசாமிகள் யசோதாவின் அருகில் வந்ததும் அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிவிட்டனர்.
நகையை காப்பாற்ற அவர்களுடன் போராடிய போது திருடர்களால் தாக்கப்பட்டு தடுமாறி கீழே விழுந்த யசோதா காயமடைந்தார்.
ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட யசோதா தந்த புகாரின் பேரில் ஓசூர் டவுன் போலீசார் வழக்கு பதிந்து மர்ம திருடர்களை தேடி வருகின்றனர்.